Showing posts with label ஒருங்கிணைந்தப் பண்ணை. Show all posts
Showing posts with label ஒருங்கிணைந்தப் பண்ணை. Show all posts

Tuesday, January 13, 2015

ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து நண்பர்களிடமும் என் குடும்பத்தினரிடமும் சில முறை பேசியிருக்கிறேன். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வமின்மையோ அல்லது என் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கை(!)யோ யாரும் செவி மடுத்துக் கேட்பாரில்லை. ஏற்கனவே சிறிய அளவிளான ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தினமணி செய்தியை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் (மீன் குழி மற்றும் நெல்).
பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.
திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.
வெங்கட்ராமன் பண்ணையம்
பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்

Friday, October 10, 2014

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உற்பத்தி மற்றும் செலவுகள்

வேளாண் காலநிலைக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது மழை, மண் வகைகள் மற்றும் விற்பனைத் தேவை போன்ற இயற்கை ஆதாரங்களின் மூலம்  நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேளாண் சூழலியல் மற்றும் பயிர்முறை போன்றவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள வேளாண் காலநிலை மண்டலத்திற்கு பண்ணையம் மாறுகிறது.
1.  மேற்கு மண்டலம்
  • நன்செய்
பயிர் + மீன் பண்ணை + கோழிப்பண்ணை + காளாண் வளர்ப்பு
  • இறவைப்பகுதி
உயிரி வாயு உற்பத்தி + காளாண் + பால் கறக்கும் கால்நடை
  • மானாவாரிப் பகுதி
பயிர் உற்பத்தி + தீவனப்பயிர் + மரங்கள்
2.  வட மேற்கு மண்டலம்
சாகுபடிபயிர் + பால் கறக்கும் பசுக்கள் + கோழிப்பண்ணை 
(6 அடுக்குகள்)

3.  மலைப்பிரதேசம்
சாகுபடிபயிர் + பால் கறக்கும் பசுக்கள் + கோழிப்பண்ணை 
(6 அடுக்குகள்) + இறைச்சிக் கோழிகள்

4.  காவேரி டெல்டா மண்டலம்
  • நெற் பயிர் + பால் கறக்கும் பசுக்கள்
  • நெற் பயிர் + வாத்து வளர்ப்பு + மீன் வளர்ப்பு
  • நெற் பயிர் + ஆடு வளர்ப்பு
5. தெற்கு மண்டலம்
நெல் சார்ந்த பயிர் + மீன் வளர்ப்பு + கோழிப்பண்ணை 
ஒருங்கிணைந்த பண்ணையம் உற்பத்தி மற்றும் செலவுகள்

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் புறா வளர்ப்பு

புறாக்களின் எண்ணிக்கை   
:40 ஜோடிகள்
40 ஜோடிகளில் உருவாக்கப்படும் புறாக்குஞ்சுகளின்  எண்ணிக்கை  :46 /  மாதம்
ஒரு மாத புறாக்குஞ்சுகளின் எடை  :350 கிராம்
புறா இறைச்சியின் விலை     :ரூ. 80 / கிலோ
வருவாய் /  மாதம் :ரூ. 1,288
வருவாய் /  வருடம் :ரூ. 15,456

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ…

- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்… ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தகையதொரு காலகட்டத்தில், “கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்” என்றபடி பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்குத் திரும்பியதோடு, ‘இயற்கை விவசாயம்… ஒருங்கிணைந்த பண்ணையம்…’ என்று அசத்தலாக புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது நவநாகரிக காதல் தம்பதி ஒன்று.

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சான்பட்டியைச் சேர்ந்தவர் செந்தமிழன் (அலைபேசி: 97917-54596). பத்திரிகையாளர், சினிமா கதாசிரியர், குறும்பட இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிகையாளர், கல்லூரி விரிவுரையாளர் என்று தானும் சளைக்காமல் பன்முகம் கொண்டவர்தான் இவரின் மனைவி காந்திமதி. சென்னைப் பட்டணத்தின் காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சத்யம் சினிமா காம்ப்ளக்ஸ் என்று சொகுசு வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு, இப்போது ஆச்சான்பட்டியின் நிரந்தரவாசிகளாக பிறப்பெடுத்திருக்கின்றனர் இருவரும்.
நிலம் தரும் நம்பிக்கையை வேற எதுவும் தராது!

“பத்திரிகை, சினிமானு பரபரப்பான வாழ்க்கை ஒரு கட்டத்துல சலிப்பையும், சித்ரவதையையும் கொடுக்கத் தொடங்கிச்சி. நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்ங்கிறதும் அதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமில்ல… ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகாகோ எழுதின ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைப் படிச்சது, எனக்குள்ள ரொம்ப மாற்றத்தைக் கொண்டு வந்துச்சி. தமிழர் மரபு, பண்டைய விவசாயம் பத்தின புத்தகங்கள், செம்மறி ஆடு மேய்க்கறவங்களோட வாழ்க்கை முறையை மையமா வெச்சி, நான் இயக்கின ‘ஆடோடிகள்’ குறும்படம் எல்லாமும் சேர்ந்துதான் என்னை கிராமத்துக்கு திரும்ப வெச்சிடுச்சி.

ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!

10 மாதங்களில் அறுவடை! ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!
 
விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்.திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.
சிறிய இடமே போதும் 

ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கரில் ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிகோம். இது போக அரை ஏக்கரில் 21 தென்னை இருக்கிறது. எல்லாம் ஏழு வயதான மரங்கள்.  நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். 6 சென்ட் குளம், 10 மாதம், 30 ஆயிரம் என்று விறு விறு லாபம் தரும் விரால் மீன் என்று சமீபத்தில் பசுமை விகடனில்  (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும்தான், சின்ன இடத்திலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது  அரை ஏக்கர் இருக்கின்ற தென்னைக்கு இடையில் ஏன் விரால் மீன்கள் வளர்க்கக் கூடாது என்று  நண்பர் செல்லப்பாண்டியனிடம்  கூறி அவரும் இதில் ஆர்வமானதும் இரண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.சேவியர் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குச் சென்று, விரால் மீன் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது பத்து மாதம் ஓடிவிட்டது. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கிறது என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.

நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் 
தென்னைக்கு இடையில், 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்தில் தனித்தனியாக இரண்டு குளங்கள் வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் தோட்டம் முழுக்கவே களிமண் பூமி என்பதால் வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லை. நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒரு மாத வயதுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனர். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள் என்று இரண்டு குளத்திலும் பத்தாயிரம் குஞ்சுகள்.

நிழல் கொடுக்க தாமரை 
மீன் குஞ்சுகளை, பறவைகளிடமிருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல் வலையைக் கட்டியிருக்கிறார்கள். தென்னை மரங்களோட நிழல் கிடைப்பதால், மீன்களுக்கு வெயிலின் பாதிப்பு அதிகளவில் இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கிறார்கள்.

பால் பண்ணை தொழில்

விவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமுறைகளும் கீழே காணலாம்.
இந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்

கறவை இனங்கள்:

சாஹிவால்
அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.
சாஹிவால் பசு
பால் உற்பத்தி – கிராம சுழலில் : 1700 கிலோ – வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ
32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது
கறவை கால இடைவெளி – 15 மாதம்.
கிர்

தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

கிர் வகை பசு
பால் உற்பத்தி – கிராம சூழல் : 900 கிலோ வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ
தார்பர்கர்
ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
தார்பர்கர்
பால் உற்பத்தி – கிராமசூழல் :1660 கிலோ – வணிக பால் பண்ணை: 2500 கிலோ

Saturday, October 4, 2014

ஒருங்கிணைந்தப் பண்ணை

ஆண்டுக்க ரூ.9 லட்சம் லாபம்.. 9 ஏக்கரில் உயர்ந்து நிற்கும்.ஓர் ஒருங்கிணைந்தப் பண்ணை!
கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கினால், எதிலுமே கணிசமான லாபம்தான்” என்று தெம்பாகப் பேசும் ஜெயராமன், ஒன்பது ஏக்கர் நிலத்தில்.. தென்னை , பாக்கு, வாழை, ஆடு, மாடு, கோழி, மீன், தேன்.. என ஒருங்கிணைந்தப் பண்ணை அமைத்து, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் வருமானத்தில்!
சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன் பாளையம். அபநவம் கிராமத்திலிருக்கும் பண்ணைக்குச் சென்ற நம்மை அன்புடன் வரவேற்ற ஜெயராமன், தன்னைப் பற்றிய அறிமுக உரையோடு ஆரம்பித்தார்.. “பி.எஸ்.சி. (வேதியியல்) படித்துவிட்டு, விவசாயம் பார்க்க வந்தவன் நான். 88-ம் வருடம் வந்த வறட்சியில் எங்க பகுதியில் ஓடிக்கிட்டிருந்த ‘வசிஷ்ட நதி’ வறண்டு போயிடுச்சு.பயிர்களெல்லாம் வாடத் தொடங்கி விட்டது, இதைச் சமாளிப்பதற்காக வேளாண்மைத் துறை அதிகாரிகள் போய் பார்த்த பொழுது, சொட்டு நீர்ப்பாசனத்தைப் பற்றிக் தெரிந்துக்கொண்டேன். விவசாயம், கால்நடை வளர்ப்பு சம்பந்தமான நிறையப் பயிற்சிகளில் கலந்துக்கிட்டப்ப.. ஆடு, மாடு, வளர்ப்பு எப்படி என்பதை புரிந்துகொண்டேன். விவசாயப் பயிற்சிகளுக்கு சென்ற பொழுது ஈ பண்ணை வடிவமைப்பு, தென்னை, வாழை, சாகுபடி பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன்.
இது எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எனக்குத் தோணிச்சு. அதனால்தனர் மூன்று வருடத்திற்கு முன் ஒன்பது ஏக்கரில் இந்த ‘ஒருங்கிணைந்தப் பண்ணை’யை அமைத்தேன். பண்ணைக்குள் கிடைக்கும் எந்தக் கழிவையும் வீணாக்காமல், உரமாக மாற்றி உபயோகப்படுத்திடுவேன். அதனால் இங்க ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு. மொத்தத்தில் மனசுக்கு நிறைவான வருமானத்தோட பண்ணையம் செய்துகொண்டிருக்கிறேன்.



தென்னைக்கிடையில் வாழை, பாக்கு!

‘ஏழு ஏக்கர் நிலத்தில், 23x23 அடி இடைவெளியில் 15 வயதான தென்னை இருந்தது. அதற்கிடையில், 7x7 அடி இடைவெளியில் பாக்கு நடவு செய்தேன். அதற்கு இடையில் அதே இடைவெளியில் கதளி வாழையை நடவு செய்திருக்கிறேன். ஏக்கருக்கு 70 தென்னை, 900 பாக்க, 900 வாழை என்று எழு ஏக்கரிலும் சேர்த்து 490 தென்னை, 6,300 வாழை, 6,300 பாக்கு மரங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு இடையில் அரை அடி இடைவெளியில் கோ – 4 தீவனக் கரணைகளை நடவு செய்திருக்கிறேன்.

பறிப்பதற்கு முன்பே பணம்!

தென்னை, பாக்கு ஆகியவற்றை நடவு செய்த ஐந்தரை வருடங்களில் வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும். என்னுடைய தோப்பில் ஒரு தென்ளை மரத்தில் இருந்து வருடத்திற்கு சராசரியாக  150 காய்கள் வரைக்கும் கிடைக்கின்றன. ஆள் பற்றாக்குறையால், மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய் என்று கணக்கிட்டு குத்தகைக்கு விட்டிருக்கிறேன்.  இதன் மூலமாக 490 மரங்களுக்கும் சேர்த்து வருடத்திற்கு 98,000 ரூபாய் கிடைக்கிறது. பாக்கு காய்ப்புக்கு வர இன்னமும் இரண்டரை வருடங்கள் ஆகும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக இரண்டரை கிலோ அளவிற்கு பாக்கு கிடைக்கும். அதன் மூலம் ஒரு மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

வாழை தரும் வஞ்சமில்லா வருமானம்!

வாழையில் வருடத்திற்கு 6,200 தார்களுக்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு தார் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலெ, 6,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பக்கக் கன்றுகளை நல்லபடியாகப் பராமரித்தால்.. தொடர்ந்து ஐந்தாண்டுகள் வரை, வாழையில் வருமானம் பார்க்கலாம்.
கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம்!

இடைவெளிகளில் நடவு செய்திருக்கும் கோ – 4 புல் மூலமாக வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 டன் தீவனம் கிடைக்கிறது. தனியாக ஒன்றரை ஏக்கரில் சவுண்டல் (சூபாபுல்), கோ – 4, கோ.எப்.எஸ்.ஹெச்.29.. போன்ற பசுந்தீவனங்களும், அசோலாவும் சாகுபடி செய்கிறேன். இந்தத் தீவனங்களை ஆதாரமாக வைத்துதான் 12 கறவை மாடுகளை வளர்க்கிறேன். இதில் எப்பொழுதுமே 8 மாடுகள் கறவையில் இருப்பதுபோல பராமரித்து வருவதால், வருடம் முழுவதும் பால் மூலமாக கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.