Thursday, April 30, 2015

புளி சாகுபடி (Puli Saagupadi) - Tamarind Cultivation


புளி இரகங்கள் :
  • பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
  • மணல் கலந்த மண்  இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
  • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
பருவம் : ஜுன்  – டிசம்பர்
விதையும் விதைப்பும்
இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல்.
இடைவெளி : 8-10 x 8-10 செ.மீ
நடவு :
  • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
  • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவவேண்டும்.
  • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றிக் கட்டிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
  • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
  • மானாவாரிப் பயிராக பயிரிடப்படுவதால் வழக்கமாக உரமிடுவது இல்லை. இருந்தாலும் அங்கக உரங்களை இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
  • செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
  • மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும்.
ஊடுபயிர் :
  • கன்றுகள் வளர்ந்து விளைச்சலுக்கு வரும் வரை முதல் 4 ஆண்டுகளில் ஊடுபயிர்களைப் பயிர் செய்யலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
  • இலைத்தின்னும் புழு :எண்டோசல்பான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
  • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில் தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
  • மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.

தரிசுநிலத்தில் புளி சாகுபடி


ரகங்கள்: பிகேஎம்1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்
மண் மற்றும் தட்பவெப்பநிலை:
  • மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
  • வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
  • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ. வரை போதுமானது.
  • மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
  • பருவம்: ஜூன் – டிசம்பர்
  • இனப்பெருக்கம்: விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல
நடவு:
  • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.
  • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளில் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவ வேண்டும்.
  • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றி கட்டிவிட வேண்டும்.
நீர்ப்பாசனம்:
  • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை:
  • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல்:
  • ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.
  • இதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் புளி சாகுபடி ஒரு லாபகரமான தொழிலாகும்.
தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர்,
அக்ரி கிளினிக்,268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657. அலைபேசி எண்:093607 48542.

2 comments:

  1. பால் உற்பத்தி பெருக Snf மற்றும் Fat அதிகரிக்க அனுகவும்.9940072718

    ReplyDelete
  2. நல்ல தரமான புளியம்கன்று எங்கு வாங்கலாம். தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

    ReplyDelete