Showing posts with label மா. Show all posts
Showing posts with label மா. Show all posts

Wednesday, September 30, 2015

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? (90 Naatkalil Maram Valarppu) - Growing a tree in 90 days


குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக


யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...

மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....

பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.



90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? 

‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.



இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

Friday, February 27, 2015

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மா மரம்:
ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும்.
• 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும்.
பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
• 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.
மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.
கொய்யா:
கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும்.
செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும்.
இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும்.
வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

Thursday, January 15, 2015

இயற்கை முறையில் இமாம்பசந்த் - மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சாகுபடி முறைகளோடு சில தொழில்நுட்பங்களைச் சேர்க்கும்போது விளைச்சலில் அபரிமிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. பல விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். திண்டுக்கல், துரைபாண்டியன் அத்தகையோரில் ஒருவர். இவர், கிட்டத்தட்ட 98% இயற்கை முறை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவருகிறார்!
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 19-வது கிலோமீட்டரில் உள்ள கம்பிளியம்பட்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, துரைபாண்டியனின் மாந்தோப்பு. தோப்பைச் சுற்றியுள்ள நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக புற்கள்கூட கருகியிருக்கும் நிலையிலும், இவருடைய மாந்தோப்பு மட்டும் பசுமை கட்டி நிற்கிறது. முறையாக கவாத்து செய்யப்பட்ட மா மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான்கு மா மரங்களுக்கு இடையில் ஒரு தென்னை... ஒவ்வொரு தென்னையைச் சுற்றியும் வாழை மரங்கள்... என அணிவகுத்து நிற்கின்றன. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டகையில் அமர்ந்திருந்த துரைபாண்டியனைச் சந்தித்தோம்.
இமாம்பசந்த் ரகத்துக்கு அதிக விலை!
''லாரி டிரான்ஸ்போர்ட்தான் எனக்கு பிசினஸ். திண்டுக்கல்லுல ஒரு கல்யாண மண்டபம் இருக்கு. ரெண்டையும் பாத்துக்கிட்டு விவசாயத்தையும் செஞ்சிட்டு இருக்கேன். இந்த இடம் ஒரு காலத்துல கல்லுக் காடா இருந்துச்சி. 30 வருஷத்துக்கு முன்ன மா நடலாம்னு முடிவு செஞ்சேன். இது சம்பந்தமா என்னோட சொந்தக்காரர் பாஸ்கரன்கிட்ட பேசினப்போ, 'நல்ல யோசனை’னு தெம்பு கொடுத்தார். உடனே, ஆந்திர மாநிலம் 'ஜிதிகுப்பா’ங்கிற இடத்துக்குப் போய், கல்லாமை, செந்தூரம், பெங்களூரா, இமாம்பசந்த்னு பல ரகங்கள்ல தரமான மாங்கன்னுகளை வாங்கிட்டு வந்து நட்டோம். எல்லாம் வளர்ந்து காய்ப்புக்கு வந்த சமயத்துல, 4 இமாம்பசந்த மரங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்த ரகத்துக்குத்தான் அதிக விலை கிடைச்சிது. அதனால, தோப்பு முழுக்க இமாம்பசந்த் ரகத்தையே நட்டுடலாம்னு முடிவு செஞ்சிட்டோம். அதுக்காக, இமாம்பசந்த் பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு நானும், பாஸ்கரனும் அலைஞ்சப்போ, ஒரு தகவல் கிடைச்சிது.
ஒட்டுச்செடியில் ஆண்டு முழுவதும் காய்ப்பு!
ஆந்திராவைச் சேர்ந்த தோட்டக்கலைப் பேராசிரியர் ஒருத்தர், 'இமாம்பசந்த், ஒரு வருஷம்விட்டு ஒரு வருஷம்தான் நல்ல மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரு சின்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருஷம் முழுக்க காய்க்க வைக்க முடியும். ஃபீனா ரக மாஞ்செடியை (நீலம் ரக மாம்பழத்தை ஆந்திர மாநிலத்தில் இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்) வேர்ச்செடியாகவும், இமாம்பசந்த்தை தாய்ச் செடியாகவும் வெச்சி ஒட்டுக்கட்டி... தரமான இமாம்பசந்த் செடிகளை உருவாக்கினா, மகசூலும் நல்லா இருக்கும். வருஷம் முழுசும் காய்க்கும்’னு சொல்லி... ஃபீனா ரகச் செடிகளை வாங்கிக் கொடுத்து, ஒட்டுக் கட்டுறதுக்கு ஆட்களையும் ஏற்பாடு செஞ்சி கொடுத்தாரு. ஃபீனா ரகம் நல்ல சுவையா இருக்கறதோட பழமும் பெருசா இருக்கும். அவர் சொன்ன மாதிரி ஒட்டுக் கட்டி நாத்து உருவானதும்... தோட்டத்துல இருந்த மத்த மரங்களை எல்லாம் வெட்டிட்டு... முழுக்க இமாம்பசந்த் செடிகளை நட்டுட்டோம். இப்போ, மொத்தம் 21 ஏக்கர்ல 800 இமாம்பசந்த் இருக்கு. கூடவே, மகரந்தச் சேர்க்கைக்காக சேலம், பெங்களூரா, செந்தூரம் ரகங்கள்ல 250 மரங்களை வெச்சிருக்கோம்'' என்ற துரைபாண்டியன், தொடர்ந்தார்.
''மரங்கள் எல்லாம் ஒவ்வொரு வருஷமும் நல்ல மகசூல் கொடுக்குது. ஆரம்பத்துல வெச்ச நாலு தாய் மரங்களும் இன்னமும் நல்லா காய்ச்சிட்டு இருக்கு. அதுல மறுபடியும் ஒட்டுக் கட்டி அடர்நடவு முறையில
20 ஏக்கர்ல இமாம்பசந்த் நடப்போறோம். தோப்புக்கு கிணத்துப் பாசனம்தான். ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கிணத்துல இருந்து, தண்ணி கொண்டு வந்து சொட்டு நீர் மூலமா பாசனம் பண்றோம். கடுமையான வறட்சியிலயும் மரங்களைக் காய விடாம வெச்சிருக்கறது, சொட்டு நீர்தான்'' என்ற துரைபாண்டியன், இமாம்பசந்த் சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே.