பயனுள்ள சில‌ தகவல்கள்


1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைந்து கஷ்டப்படுபவர்கள் http://www.bharatbloodbank.com இந்த இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்த தானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும்.

3.மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசக் கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

4.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால். அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் ஸ்டாம்ப் இல்லாமலே இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்துவிடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக்கொள்ளும்.

5.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்பநிலை கூடுதலாக 10 டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தைவிட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமய மலையில் உள்ள பனிப்பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்தவரை,
*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.
*நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட)தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
*ப்ளாஸ்டிக் பயன்பாட்டினை முடிந்தவரை குறைக்கவும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்கவும் முயற்சிக்கலாம்.

6.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராணவாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு, மனித வளத்திற்கு பாடுபடுவோம்!

7.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்துக்கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்: http://ruraleye.org/

8.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

9.இரத்தப் புற்றுநோய்: "Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு:
முகவரி:-
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

10.விசேஷ வைபவங்களில் மீதமாகும் உணவை கீழே கொட்டவேண்டாம். தயவுசெய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

No comments:

Post a Comment