Tuesday, January 13, 2015

மக்காச்சோளம் சாகுபடி – இயற்கை மற்றும் செயற்கை

மக்காச்சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்பதை ஏற்கனவே இங்கே வெளியிட்டு இருந்தோம். தேவையுடன் சேர்த்து இதற்கான செய்யும் பக்குவமும் குறைவே. இறைவை மற்றும மானாவாரி இரண்டுக்குமே ஏற்ற இந்தப் பயிருக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. குறுகிய காலத்தில் மகசூல். ஓரளவு கட்டுபடியாகக்கூடிய வேலை. வில்லங்கமில்லாத விற்பனை என்பதால் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வழக்கமான முறையில் விவசாயம் செய்து வருவோர் மத்தியில் சொட்டுநீர் பாசனத்தின் உதவி கொண்டு அதிக மகசூல் அடைந்திருக்கிறார் கோயமுத்தூர் மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ம. கோவிந்தராசன்.
அவரது சொல்படி
  • உற்பத்தி செலவு ரொம்ப கம்மி.
  • அதிக உரம் பூச்சி மருந்துக்கு வேலை இல்லை
  • ஓரளவு கட்டுபடியாகக்கூடிய விலையும் கிடைக்கும்
சமச்சீர் உரமேலாண்மை முறையில் இயற்கை ரசாயனம் கலந்து மூன்று ஏக்கரும் இயற்கை முறையில் ஒரு ஏக்கரும் சாகுபடி செய்திருந்த இவர் இயற்கை வழிப்படி கூடுதல் மகசூல் கிடைக்கும் என்கிறார்.
  • நுட்பம் : மக்காச்சோளம்
  • வயது : 110 நாள்
  • நிலம் : வடிகால் வசதி உள்ள அனைத்து நிலங்களும்
  • சாகுபடி காலம் : இறவையில் வருடம் முழுவதும்
உழவு
சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து 5 டிராக்டர் அளவு கோழி எருவைக் கொட்டி இறைத்து மீண்டும் ஒரு உழவு செய்து நிலத்தை ஆறப்போட வேண்டும். சொட்டுநீர் பாசணம் பயன்படுத்தும்போது பார் மற்றும் வரப்பு எடுக்கவேண்டியதில்லை. உழவு ஓட்டிய வயலில் அப்படியே நடவு செய்துவிடலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். செடிக்கு செடி ஒரு அடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். ஒன்றரை அடி லேட்டரல் குழாய்களை ஒன்றரை அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவது போல் அமைக்கவேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியில் இந்தக் குழாய்களை அமைத்தால் போதும்.

பச்சை வர்ணத்தின் X குறிகள் – நாற்றுக்கள்
கருப்புவர்ணம் சொட்டு நீர் குழாய்கள்


பாசனத்துடன் பஞ்சகவ்யா
ஈரத்தைப் பொறுத்து வாரம் இருமுறை பாசனம் செய்யலாம். மொத்த சாகுபடி காலத்தில் அதிகபட்சம் 4 முறை பாசனம் செய்யலாம். விதைத்த 6ஆம் நாள் முளைவிடும் இதற்கு 15ஆம் நாளில் களைஎடுக்கவேண்டும். சொட்டு நீர்ப் பாசன முறையில் பயிருக்கு மட்டுமே பாசனம் நடைபெறுவதால் மற்ற இடங்களில் களை வரும் வாய்ப்பு குறைவு. 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும். ஏற்கனவே கொட்டிய கோழி எருவின் சத்துக்களை எடுத்து செடிகளுக்குக் கொடுப்பதுடன், பயிர் வளர்வதற்குத் தேவையான கூடுதல் தழைச்சத்தையும் பஞ்சகவ்யா கொடுக்கும். 40 நாளில் ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்து பூக்களோடு நிற்கும். அந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லி்டடர் பஞ்சகவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடைவதுடன் அடிச்சாம்பல் நோயும் தாக்காது

அறுவடை
60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் வரிசை கட்டிய தங்கப் பற்கள் பொன்று மணிகள் காணப்படும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்திவிடவேண்டும். 110ஆம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். ஆட்களை வி்டடு கதிர்களை மட்டும் ஒடித்து எடுக்கவேண்டும். அளத்து மேட்டில் குவித்து கதிரடிக்கும் எந்திரம் மூலமாக மணிகளைப் பிரித்துக் கொள்ளலாம்.

பாசனம் தரும் பாடம்
ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் ஒரு முறை பாசனம் செய்ய 20ஆயிரம் லிட்டர் தேவைப்படும். மொத்த சாகுபடி காலமான 110 நாட்களுக்கும் கணக்கிட்டால் 8 லட்சம் லிட்டர். ஆனால் வாய்க்கால் பாசனத்தில் 18 லட்சம் லிட்டர் வரை நீர் கொடுக்கப்படுகிறது. எனவே நீர்ப் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் ஒரு வரப்பிரசாதமே. அறுவடை முடிந்த சோளத்தட்டைகளை வெட்டி எடுத்து மாட்டுத் தீவனத்துக்காகச் சேமித்துக் கொள்ளலாம்.

வயலுக்கு வந்து எடைபோட்டு வாங்கிச் செல்லும் விவசாயிகள் இருந்தாலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் சொல்கிறார் கோவிந்தராஜன். கட்டுப்படியான விலை கிடைக்கி வரைக்கும் அங்கேயே இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதோட மதிப்புக்கு ஏத்த மாதிரி அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பொருளீட்டுக் கடன் கொடுப்பார்கள். அதை வாங்கி அடுத்த சாகுபடிக்குப் பயன்படுத்திக்கலாம்.
ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 900 முதல் 1000 வரை விற்பனையாகிறது. அது கட்டுபடி ஆகிற விலைதான்.
அவர் மூன்று ஏக்கரில் சமச்சீர் உர மேலாண்மைப் படி சாகுபடி செய்த முறை
உழவு செய்து பார் கலப்பை மூலம் பாத்தி அமைத்து விதைகளை நடவு செய்யவேண்டும். பாத்தியில் உள்ள பாரின் அளவு ஒன்றே கால் அடி இருக்கவேண்டும். ஏக்கருக்கு 7 கிலோ விதைகள் தேவைப்படும்.

பாரின் இரு சரிவிலும் ஒரு அடி இடைவெளியில் விதையை ஊன்ற வேண்டும். பின்னர் பார் வரப்பு முழுவதும் நனையும்படி தண்ணீர்ப் பாசனம் செய்யவேண்டும். பிறகு வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் போதும். 15ஆம் நாளில் களை எடுத்து 50 கிலோ தழைச்சத்து உரமான யூரியாவை ஏகமாக வயல் முழுவதும் இறைத்துவிட வேண்டும். இந்த யூரியா கோழி எருவில் உள்ள சத்துக்களை விரைவாக செடிகளுக்கு எடுத்துக் கொடுக்க உதவும். 40ஆம் நாளில் 50 கிலோ யூரியாவைக் கொடுக்கவேண்டும்.
ரசாயண முறையில் ஏக்கருக்கு செலவு 19,000
மகசூல் 30 குவிண்டால்
இயற்கை முறையில் ஏக்கருக்கு 14,000
மககூல் 40 குவிண்டால்
வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டு நீர் பாசனத்தில் வேலையும் குறைவு. ஆக குறைந்த செலவு மற்றும் உழைப்பில் பலமான வருமானம் என்பது கோவிந்தராஜனின் அனுபவம்.
விதைப்பு
விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில்
  • கோ 1, கங்கா,
  • கோ ஹெச் (எம்) 4,
  • கோ ஹெச் (எம்) 5
ஆகிய வீரிய ஒட்டு ரகங்களை பயிரிடலாம். விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு பாக்கெட் அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்த விதையை விதைப்பு செய்ய வேண்டும்.
உரம்
மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும். மண்ணாய்வு பரிந்துரைப்படி தேவையறிந்து ரசாயன உரமிட வேண்டும். இல்லையெனில் பொதுப்பரிந்துரையான
  • 54 கிலோ தழைச்சத்து,
  • 25 கிலோ மணிச்சத்து,
  • 20 கிலோ சாம்பல் சத்து
தரவல்ல உரங்களை இட வேண்டும்.
  • 30 கிலோ யூரியா,
  • 156 கிலோ சூப்பர் பாஸ்பேட்,
  • 33 கிலோ பொட்டாஷ்
உரங்களை அடியரமாக இட வேண்டும்.
நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைகளை ஊன்றுவதற்கு முன் மேலுரமாக இடவேண்டும்.
பாசனம்
மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.
பூச்சி
குருத்துப்புழு, சாம்பல் வண்டை கட்டுப்படுத்த எண்டோ சல்பான் 4டி அல்லது பாசலோன் 4 கிலோ தூளை 16 கிலோ மணலுடன் கலந்து இலையும், தண்டுப்பகுதியும் சேரும் இடங்களில் உள்ள இடைவெளியில் இடவேண்டும். அசுவினியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி டைமிதோயேட்டை தெளிக்க வேண்டும்.
அறுவடை முறை
மக்காச்சோள கதிரின் மூடிய உறை மஞ்சளாகவும், விதைகள் சற்று கடினமாகவும் மாறிய பின் கதிரை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மக்காச்சோள தட்டையை காயவிடாமல் பச்சையாக அறுவடை செய்து சிறுசிறு துண்டுகளாக செட்டி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு இறவையில் 2,500 கிலோ முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்க வாயப்புள்ளது. ஒரு கிலோ மக்காச்சோளத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் ஏக்கருக்கு 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். எனவே விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்று பயனடையலாம்.


மக்காச்சோளத்தில் பூச்சி கட்டுப்பாடு

மக்காச்சோளத்தை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்றிவிட்டால் குறைந்த முதலீட்டில், குறைந்த நாளில் அதிக லாபம் பார்க்க முடியும்.
தற்போது தமிழ்நாட்டில் உணவு மற்றும் தீவனத் தேவைக்காக பற்றாக்குறை உள்ளது. விவசாயிகள் இந் நேரத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். நல்ல மகசூல் கிடைக்க உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்.
மக்காச்சோளம் 90 முதல் 110 நாள்களிலேயே விளைந்து பலன் கொடுக்கும். மக்காச்சோளத்தை பூச்சித் தாக்குதலில் இருந்து காத்துக் கொண்டால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும்.
குருத்து காயும் நோய் வகை: 
மக்காச்சோளத்தை தாக்கும் பூச்சிகளை பொறுத்தவரை ஒரு வகையான ஈ இலைகளில் முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் தண்டைக் குடைந்து செல்லும்.

இதனால் நடுக்குருத்தின் அடிப்பாகம் பாதிக்கப்படும். முழுச் செடியும் காய்ந்து போவதற்கான வாய்ப்பும் உண்டு.
இப்பூச்சி பெரும்பாலும் ஒரு மாத பயிரைத் தாக்கும். மீன், கருவாட்டு பொறியை வைத்து இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேருக்கு 12 அல்லது 13 என்ற அளவில் அமைக்க வேண்டும்.
இலைகாயும் நோய் வகை: 
இந்த நோய் மக்காச்சோளத்தை அதிகம் தாக்கும் நோய் ஆகும். இதை அடிச்சாம்பல் நோய் என்று விவசாயத் துறையினர் கூறுகின்றனர்.

இந்நோய் தாக்கினால் இலைகளின் அடிப்பாகம் வெண்மையாக மாறும். இலைகள் காய்ந்துவிடும். இலைகளின் நரம்புகள் கிழிந்து விடும். இலை நார் போலக் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த இந்நோய் தாக்கிய செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 0.2 சதவீத மெட்டலாக்சில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
பூச்சித் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
பூச்சிகளைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி குறித்த அப்பகுதி விவசாயத் துறை வல்லுநர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். முன் பருவத்திலேயே விதைக்க வேண்டும்.
பூச்சியால் தாக்கப்பட்டு குருத்து காய்ந்த செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மக்காச்சோளத்தைத் தாக்கும் பூச்சிகளுக்கான எதிர்பூச்சிகளான ஊக்குவிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றனர்.

No comments:

Post a Comment