Tuesday, November 17, 2015

‪சீமைக்கருவேல‬ மரங்களை கட்டுப்படுத்தும் மருந்து


‘‘சீமைக் கருவேல மரமானது... வேலிக்காத்தான், வேலிக்கருவை... என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை. வெளி்நாடுகளில் மட்டுமே இதற்கான ஆய்வகம் உள்ளன. வெளிநாட்டில் சீமைக்கருவேல மரத்தின் வளர்ச்சி கட்டுப்படுத்தும் மருந்து உள்ளதாக கேள்விப்பட்டோம். எங்கள் அமைப்பும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது. இயந்திரங்கள் கொண்டு தோண்டிஎடுக்க செலவு கூடுதலானது. இதனால், வெளிநாட்டிலிருந்து அந்த மருந்தை வரவழைத்து, இங்கு சோதித்துப் பார்த்தோம். இந்த மருந்தை தரையில் இருந்து, ஒரு அடி உயரம்விட்டு, பெயிண்ட் அடிப்பது போல அடித்துவிட்டால் போதும்... சீமைக் கருவேல மரம் 7 நாட்களில் கருகி விடுகிறது. தரையில் இருந்து ஓரடி உயரம் விட்டு, மீதியுள்ளவற்றை விறகுக்கு வெட்டிப் பயன்படுத்தலாம்.


இந்த மருந்தைப் பயன்படுத்தினால், அந்த மரம் மீண்டும் துளிர்த்து வளர வாய்ப்புகள் இல்லை. முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, இந்த மருந்து சீமைக்கருவேல மரத்தை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறது. மற்ற மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, இந்த மருந்து பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியவாதிகளால், தொடங்கப்பட்ட, எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் லாபம் நோக்கம் இல்லாமல், இந்த மருந்தை விற்பனை செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு தேவையான மருந்தின் விலை `4 ஆயிரம் ஆகும்’’ என்கிறார் மதுரையில் செயல்பட்டு வரும், சத்யகிரஹா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரமணன்.

தொடர்புக்கு, செல்போன்: 98658- 78142.

No comments:

Post a Comment