Friday, February 27, 2015

நல்ல தொழில் நாட்டுக் கோழி வளர்ப்பு

இது என்னடா கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என நினைக்காதீர்கள்பகுதி நேரமாகச் சம்பாதிக்க ஆன்லைன் மட்டுமல்லஆஃப்லைனிலும் வீட்டிலிருந்து சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கோழி வளர்ப்புசற்று புற நகரப் பகுதிகளில் இருப்பவர்களும்,கிராமப்புறங்களிலும் இருப்பவர்களுக்கு வீட்டை ஒட்டியோ அல்லது அக்கம் பக்கத்திலோ ஒரு சென்ட் இடமிருந்தால் போதும்வீட்டிலிருந்தபடியே இந்த தொழிலையும் பகுதி நேரமாகச் செய்யலாம்.

ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், இன்றும் எல்லோரும் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் பெறலாம்.நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் , அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.குஞ்சுகள் அந்தந்த மாவட்ட கால்நடைதுறை மாதிரி பண்ணைகளில் கிடைக்கும்.இன்குபேட்டர் விவரங்களையும் அவர்களின் மூலம் அறியலாம்.


பராமரிப்பு முறைகள்
பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது.ஆனால் வேப்ப மர நிழலுக்கு அடியில் பண்ணை அமைத்தால் நோய் பாதிப்பு இருக்காது.

பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.

முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.ஸ்டார்டர் பேக் எனப்படும் ஆரம்ப தீனி வகைகள் கால்நடை தீவனக் கடைகளில் அதிகம் கிடைக்கும்.

48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?
நாட்டுக் கோழிகளை ஆழ்கூளமுறையிலும் வளர்க்கலாம்.கூண்டு முறையிலும் வளர்க்கலாம்.ஆழ்கூள முறை செலவு குறைவானது.

அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இதற்கு என அலகு வெட்டும் மிசின் உள்ளது.அலகு வெட்டாவிட்டால் குஞ்சுகள் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு பாதிக்கு பாதி இறந்து விடும்.நாட்டுக் கோழி வளர்ப்பில் உள்ள இந்த சிக்கலின் காரணமாகத்தான் இதனை ஆயிரக்கணக்கில் வளர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் முன் வருவதில்லை.இதனை நாம் நமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம்.சேவல்களின் எடை சீக்கிரமே அதிகரிக்கும். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.சந்தையில் சேவலை விட விடைக் கோழிகளுக்கு நல்ல விலை உண்டு.

குஞ்சு பொரிப்பு
பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
மேலும் இது பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட கால்நடைத் துறை அலுவலகங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.இதற்கென மாதாமாதம் இலவச சாப்பாட்டுடன் கூடியபயிற்சி வகுப்புகள் அளிக்கபடுகின்றன.அந்த துறை சம்பந்தமானவர்களுக்கு இதனை ஒரு ப்ராஜெக்ட் போல் சமர்பிக்க வேண்டியிருப்பதால் நம்மைப் போன்ற முனைவோர்களைச் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள் எந்த தயக்கமும் தேவையில்லை. பல லட்சங்களை கம்பெனிகளிடம் கட்டை ஈமுக் கோழி,நாட்டுக் கோழி என ஏமாறுவதைவிட அரசாங்க உதவிகள் மூலம் சுமார் முப்பதாயிரம் முதலீட்டிலேயே அந்த வருமானத்தை நாமாகச் செய்யும் போது பார்த்துவிடலாம்.மேலும் நாட்டுக் கோழிக்கு விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமே இல்லை.கறிகடைக்காரர்கள் முதல் அனைவ்ரும் தேடி வந்தே வாங்கிக் கொள்வார்கள்.இந்த பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை பசுமை விகடன் மூலம் அறியலாம்.மேலும் தமிழ் நாடு கால்நடைத்துறை வெப்சைட் மூலமும் அறியலாம்.தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் சிவகங்கை குன்றக்குடி கால்நடைப் பல்கலைக் கழகத்தில் அடிக்கடி நடக்கும் பயிற்சிகளிலும
கோழி குஞ்சு முட்டையிலிருந்து வருவதனைப் பார்ப்பதற்காக அருகிலேயே காத்திருப்பதும்... குஞ்சுகள் தாயின் மேலே ஏறி விளையாடுவதும்.. இறகுக்குள் மறைந்து கொள்வதும் பார்க்க பார்க்க ஆனந்தம்...
இப்பவெல்லாம் கிராமங்களில் கூட கோழி வளர்ப்பு குறைந்து வருகிறது... நகர வாழ்க்கை நடைமுறை எல்லோரையும் தொற்றிக் கொண்டு செல்கிறது. வேலைக்கு போக வேண்டும்.. டிவி பார்க்கணும்... சாப்பிடணும் அவ்ளதான்...
வீட்டில் செய்யும் கிராமங்களில் செய்யும் சிறுதொழில் முறைகள் குறைந்து ஆடம்பர நகர்ப்புற சிறுதொழில்முறை தான் தொலைக்காட்சிகளை நிறைப்பதுடன், மக்களையும் ரீச் ஆகுகிறது. மற்றவை கவலைக்கிடம் ஆகுகின்றன... கோழி வளர்ப்பு, பெட்டி முனைதல், கூடை பின்னுதல், பாய் முனைதல்... மறைகிறது. டெய்லரிங்க் என்னும் நிற்கிறது.

1 comment:

  1. மகிழ்ச்சி
    wathsapp no :8148291366
    நீங்கள் எந்த பதிவு புதிது போட்டாளும் அதன் இணைப்பை(லின்க்) இந்த எண்ணிற்க்கு அனுப்பவும் நன்றி நாம் ஓன்றாக பயணிப்போம் பிறகு எல்லாம் பேசுவோம் நல்ல விசயங்களை முன்னெடுப்போம் நன்றி நாம் தமிழர்

    ReplyDelete