Monday, September 28, 2015

மண் இல்லாமல் விவசாயம் - காணொளி (Mann Illaa Vivasayam) Growing plants without soil / Hydroponics & Aeroponics


அதிவேகமாக முன்னேறிவரும இந்த கால கட்டத்தில் , நம் உணவு தேவையும் அதிகரித்து வருகிறது, இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு சுமார் , ஆயிரத்து முந்நூறு கலோரிகள் நம் ஒவொருவருக்கும் குறைந்த பட்சம் தேவைப்படும் என கனகிடப்படுள்ளது , இதற்கு இன்றைய விளைநிலங்களை விட இரண்டு கோடி ஏகர் அதிகம் தேவை படுகிறது.


இந்த தேவையை சமாளிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதில் ஒன்று மண் இல்லா விவசாயம். இந்த விவசாயத்தில் உள்ள வலி முறைதான்ஹைட்ரோபோனிக்ஸ் (hydroponics)மற்றும் ஏறோபோநிக்ஸ்(aeroponics). ஹைட்ரோபோநிக்ஸ் என்றல் மண் இல்லாமல் நீர் மற்றும ஒரு செடி வளர்வதற்கு தேவைப்படும் தாதுக்களையும் , வைத்து மண் இல்லாமல் வளர்ப்பது. aeroponics என்றால் செடி வளர்வதற்கான ஈரப்பததை உண்டாகுவது இதற்கு உயரமான கடிதங்கள் தேவை. ஹைட்ரோபோநிக்ஸ் , aeroponics மற்றும் சொட்டுநீர் வழிமுறைகளை பயன் படுத்தி உயரமான கட்டங்களின் உதவியுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒர்லண்டோவில் உள்ள ஒரு ஆய்வகதில் உருவாகியுள்ளனர். இந்த வழிமுறையால் நோய் இல்லாத காய்கறிகளை உருவாக்க முடியும் என்கின்றனர், மேலே உள்ள படத்தில் இருப்பது ஒரே தாக்காளி செடிதான். இதன் மூலம் நீர் செலவும் குறைவுதான். இவை உயரமான் கட்டிடங்களில் வளர்வதால் நோய் பரவுவதை தடுக்கலாம், நீரை மறு உபயோகபடுத்தலாம் .














No comments:

Post a Comment