Saturday, December 17, 2011

கூடுதல் லாபத்திற்கு- ஆடு வளர்ப்பு



ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் உப தொழிலாக ஆடவளர்ப்பது கூடுதல் லாபம் ஈட்டித்தரும் என்று தஞ்சாவூர் கால்நடை பல்கலைக்கழபயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என். புண்ணியமூர்த்தி கூறினார்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாமில், புண்ணியமூர்த்தி பேசுகையில், நாட்டு இன ஆடுகளான குறும்பை, பள்ளை, சேலம் கருப்பு, கன்னி போன்ஆட்டினங்களை இறைச்சிக்காக வளர்க்கலாம். ராஜபாளையம் பகுதியில் கன்னி ஆடு இனங்களஅதிகம் உள்ளது.

வேலி தாண்டாத வெள்ளாடு வளர்ப்புதான் உகந்தது. இதற்கு கொட்டில் ஆடு வளர்ப்பமுறை என்று பெயர். சில கிராமங்களில் கால்நடைகளை அவிழ்த்துவிடக் கூடாதென கண்டிப்பஇருக்கிறது. அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்து சேதம் விளைவிக்காத வகையில் இருக்கொட்டில் ஆடு வளர்ப்பு முறையே உகந்தது.

இதற்கு பசுந்தீவன உற்பத்தி முக்கியமானது. புல், செடி, கொடி, இலைகள் போன்பசுந்தீவனங்களை உற்பத்தி செய்த பின்னர்தான் கொட்டில் ஆடு வளர்ப்பு திட்டத்தை தொடங்வேண்டும்.

ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்தால், 25 ஆடுகள் வரை வளர்க்கலாம். இவை இனவிருத்தி செய்து எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வளர்ந்த ஆடுகளை இறைச்சிக்காவிற்கத் தொடங்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் கொட்டில் ஆடு வளர்ப்பு முறையபின்பற்றினால், ஆடுகளின் எரு, புளுக்கை போன்றவை, விவசாய எருவாக உதவும்.

ஆடுகளை வெளியில் மேயவிடாமல் பாதுகாப்பாக பண்ணை விவசாயத்தில் கொட்டிலமுறையை பின்பற்றி வளர்த்தால் அதன் மூலம் பல்வேறு வகைகளிலும் விவசாயத்திற்கநன்மையும், கூடுதல் வருவாயும் கிடைக்கும் என்று புண்ணியமூர்த்தி கூறினார்.

இந்த பயிற்சி முகாமில் போராசிரியர் வி. ரங்கநாதன் உரையாற்றினார் இதில் தஞ்சை மாவட்டம் முழுவதிலிருந்தும் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment