Saturday, October 4, 2014

கன்னி ஆடுகள்


காணப்படும் இடங்கள்: 

விருதுநகர் (சாத்தூர்வெம்பக் கோட்டைராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர்,கயத்தார்கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம்சங்கரன்கோவில்,வாசுதேவநல்லூர்மேலநீலிதநல்லூர்முதலிய பகுதிகளில் அதிக அளவில்காணப்படுகிறதுதற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள்வளர்க்கப்பட்டு வருகின்றனஅதிகமான அளவில் திருநெல்வேலிமாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர்மாவட்டத்தில் சாத்தூர்வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.


கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்

இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லதுபழுப்புநிற கோடுகளுடனும்மேலும் அதன் அடிவயிறுதொடைப்பகுதிவால்பகுதிமற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும்கருப்புநிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை "பால்கன்னிஎன்றும்பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் "செங்கன்னிஎன்றும் அழைக்கப்படுகிறது.மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனைவரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்

குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவைஉயரமாகவும்,திடகாத்திரமாகவும்ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு"ராணுவ அணிவகுப்புபோல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள்இதுஇறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும்கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்குகொம்புகள் உண்டு

பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை
பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை
மாதாந்திர எடை வளர்ச்சி : 2-2.5 கிலோ எடை
பெட்டை ஆடுகளின் சினைக்காலம் 150 நாட்களாகும்
வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும்அதாவது 2 வருடத்தில்குட்டிகளை ஈனும்

அதிக அளவில் 2 குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை
மிகவும் குறைவான இறப்பு விகிதம்
கொட்டில் முறையில் ஆடு வளர்ப்புக்கு எற்றது
வெப்ப காலநிலைகு எற்றது

No comments:

Post a Comment