Saturday, October 4, 2014

பண்ணையின் தினசரி நடவடிக்கைகள்

அட்டவணை

பண்ணையில் மேற்கொள்ள வேண்டிய தினசரி நடவடிக்கைகள்
நேரம் (மணி) தோராயமாக
வ.எண்
பண்ணை நடவடிக்கைகள்
3.00-3.30
1.
கழுவி, சுத்தப்படுத்துதல் (கறவை மாடுகளை)
3.30-5.00
1.
அட்டவணை தீவன அளவில் ஒருபாதி தீவனம் பால்கறக்கும் முன்பு அளித்தல்

2.
பால் கறத்தல்
5.00-5.30
1.
கறந்த பாலை சேகரிப்பாளரிடம் கொடுத்தல் மேலும் முந்தைய நாளின் பால் (கேனை) பாத்திரத்தை வாங்கிக் கொள்ளுதல்

2.
பால் கறக்கும் இடம் மற்றும் பாத்திரங்களை தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துதல்
5.30-8.00
1.
கறவை மாடுகளின் கொட்டிலை சுத்தப்படுத்துத்ல

2.
கறவை மாடுகளுக்குத் தீவன மளித்தல்

3.
பண்ணையின் வளாகங்களைச் சுத்தம் செய்தல்

4.
நோய் தாக்கிய கால்நடைகளைத் தனிமைப்படுத்துதல்

5.
செயற்றைக் கருவூட்டல் முறையைத் தேவையான பசுக்களைத் தனியே பிரித்தல்
பால் கறப்பதற்கென 12-14 பசுக்களுக்கு ஒருவர் எனத் தனி ஆட்களை நியமிக்கலாம். இவர்கள் கறந்து முடித்து செல்லும்போது பண்ணை வேலை ஆட்கள் வேலைக்கு வருமாறு நியமித்தல் நலம்.
நேரம் தோராயமாக (மணியில்)
வ.எண்
பண்ணை வேலைகள் / நடவடிக்கைகள்
8.00-12.00
1.
கன்றை சுத்தப்படுத்துதல், தாய்மைக்குத் தயார்செய்தல், காளை மற்றும் கொட்டில்களை தயார்படுத்துதல்

2.
கன்று, காளை, சினை மாடுகளுக்குத் தீவனம் அளித்தல்

3.
காளைமாடுகளுக்கு பராமரித்தல்

4.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருந்து அளித்தல்

5.
கலப்பிற்குத் தயாராயுள்ள மாடுகளை இனக் கலப்பு செய்தல்

6.
பசுந்தீவனங்கள் அறுவடை செய்து, துண்டுகளாக தீவனத் தொட்டிகளில் இடுதல்
கவனிக்க வேண்டியது

கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் நேரம். குளிர் காலங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. கோடை காலமாக இருந்தால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
நேரம் தோராயமாக (மணி)
வ.எண்
பண்ணைச் செயல்கள்
12.00-1.00
1.
வேலை ஆட்களுக்கான மதிய உணவு இடைவேளை
1.00-3.00
2.
பண்ணையின் இதர வேலைகளான கால்நடைகளை இனங்கானுதல், பதிவேடுகளில் பதித்தல் சரியான தடுப்பூசிகள் சரிபார்த்தல் பழுதடைந்த உபகாரணங்களை சரிசெய்தல், வேலிகளை முறைப்படுத்துதல் கயிறு தயாரித்தல் தீவனங்களைப் பதப்படுத்துதல் சரியான இடைவெளியில் மருந்து தெளித்தல் குடற்புழு மருந்து கொடுத்தல், கொம்பு வளராமல் தடுக்கும் நடவடிக்கைகள், கால்நடை வாங்குதல் விற்றல்
(ஆதாரம்: டாக்டர்.சி.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வே.க, மதுரை)

கொம்புக்கருத்து நீக்கத்தின் பயன்கள்


கால்நடைகளில் கொம்புகள் தேவையில்லாத ஒன்று இதன் மூலம் கால்நடைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு காயப்படுத்திக் கொள்கின்றன. மேலும் கையாள்பவருக்கும் இது கடினம் ஆகும். கால்நடை உட்கொள்ளும் உணவின் ஒரு பகுதி இந்த கொம்பு வளர்ச்சியில் செலவிடப்படுகிறது. எனவே இந்த அவசியமற்ற அமைப்பை நீக்கிவிடுதல் நன்று.

கொம்புக் குருத்தை நீக்குதல்


கொம்புக் குருத்து நீக்கம் என்பது கொம்பு உருவாக்கும் செல்களை அழிப்பதாகும். முன்தலை சைனஸ் பகுதியைப் பாதிக்காமல் இதைச் செய்ய வேண்டும். இரசாணனங்கள் அல்லது சூடான இரும்பை பயன்படுத்திக் கொம்புக் குருத்தை நீக்கலாம். பல முறைகள் குருத்தை நீக்குவதற்கு இருந்தாலும் யாவற்றிலும் நன்மை தீமைகள் உண்டு. சூடான இரும்பு கொண்டு தேய்ப்பதே சாதாரணமாகக் கையாளப்படும் முறையாக இருந்தாலும் அது மிகவும் வலி ஏற்படுத்தக் கூடியது. மின்சார பியூட்டேன் கொண்டும் நீக்க இயலும். மிக அதிகமான வெப்பம் பயன்படுத்தும்போது குருத்துக்குக் கீழ் உள்ள எலும்புகள் பாதிப்படையும் காஸ்டிக் (caustic) முறையில் குருத்து நீக்குதல் சிறந்தது. காஸ்டிக் பொருட்களான சோடியும் ஹைட்ராக்ஸைடு, கால்சியம் ஹைட்ராக்ஸைடு குருத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியோ கண்களோ பாதிக்கப்படலாம். எந்த அளவு இரசாயனம் திசுக்களுடன் தொடர்புகொள்கிறதோ அந்தளவு பாதிப்பு அதிகம் கால்சியம் குளோரைடு ஊசிமூலம் செலுத்தியும் குருத்தை நீக்கலாம். ஆனால் முறையான மயக்க மருந்தளித்தல் போன்ற முன்னேற்பாடின்றி இதை பயன்படுத்த முடியாது. மேலும் கத்தி குருத்து நீக்கும் (கரண்டி, ஸ்பூன்)(spoon) போன்றவை மூலமாகவும் நீக்கலாம்.

குருத்து நீக்கும் போது கவனிக்க வேண்டியது


1. பண்ணை மேலாளர் அவரவர் வேலைகளை சரியாகப் பிரித்து நேரம் ஒதுக்க வேண்டும். சில நேரங்களில் வேலை ஆட்கள் அதிக நேரம் வேலை செய்யவேண்டியிருக்கும்.

2. பால் கறப்பவர்கள் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து பின் மாலை 5மணிக்கு சென்று விடுவார்கள். வேலை ஆட்கள் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்.
நேரம் தோ (மணி)
வ.எண்
பண்ணை வேலைகள்
2.30-3.00
1.
பால் கறப்பவர்கள் கறவைகளை கழுவி சுத்தம் செய்தல்
3.00-4.30
1.
பால் கறக்கும் முன்பு அடர்தீவன மளித்தல்

2.
பால் கறத்தல்

3.
கன்றுகளை சுத்தம் செய்து தீவனமளித்தள் சினை மாடுகள், காளை மாடுகளுக்கு அடர் தீவன மளித்தல்
4.30-5.00
1.
பாலை சேகரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு, காலையில் பால் அனுப்பிய (கேன்) பாத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல்

2.
பால் பண்ணையை (கறக்குமிடம்) சுத்தம் செய்தல்

3.
கன்றுகள், பசுக்கள், காளை மாடுகளுக்குப் பசுந்தீவனம் அளித்தல்
5.00-6.30
1.
கறவை மாடுகளின் கொட்டிலைச் சுத்தம் செய்தல்

2.
கறவைப் பசுக்களுக்குப் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் அளித்தல்

3.
பண்ணை வளாகங்களைச் சுத்தம் செய்தல்
அதைச் சுற்றியுள்ள முடிகளை அகற்ற வேண்டும்.

கொம்பு நீக்கம்


கொம்பு முளைத்த பின்பு நீக்குவதே கொம்பு நீக்கம் ஆகும். வளர்ந்த கொம்பை நீக்க கத்தி இரம்பம், கரன்டி மின்சார ஒயர், குழாய் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். பார்னஸ் முறையில் குழிந்த கொம்பு நீக்கியைப் பயன்படுத்தலாம்.
முதிர்ந்த கால்நடைகளுக்குக் கொம்பு நீக்கம் செய்வதால் அதன் முன்தலைப் பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பைக் குறைக்க அயோடின் அல்லது டிஞ்சர் தடவலாம்.

(ஆதாரம்: http://www.avma.org/reference/backgrounds/dehorning_cattle_bgnd.asp)
கொம்பு மற்றும் வால் நீக்கம்

கொம்பு நீக்கமானது கன்று மற்றும் குட்டிகளுக்கு இளம் வயதிலேயே செய்யப்படுதல் பராமரிப்புக்கு எளிதாகும்.
இயற்கையாகவே கொம்பில்லாத கால்நடை தவிர மற்ற அனைத்திற்கும் கொம்பு நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவை மேய்ச்சலின்போது மற்றும் தீவனம் அளிக்கும்போது ஒன்றையொன்று தாக்கி காயப்படுத்திக் கொள்ளும். மேலும் அதை கையாள்பவரையும் காயப்படுத்திவிடும்.
  • வண்டியிழுக்கத் தேவையான கொம்பு உள்ள மாடுகளைத் தனித்தனியே கட்டி வைத்தல் நலம்
  • வெள்ளாடுகளுக்கும் கொம்பு நீக்கிம் செய்தல் வேண்டும். இல்லையெனில் மேயும்போது எங்கேனும் கொடிகளிலோ, வேலியிலோ சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது
  • கொம்புக் குருத்து நீக்கம் பிறந்த சில நாட்களிலேயே செய்யப்பட வேண்டும்
  • அல்லது கொம்பு மிகச் சிறிதாக இருக்கும்போதே செய்தல் வேண்டும். கடினமான கொம்புகளை நீக்கும்போது வலியும் அதிகமாக இருக்கும்
  • கொம்பு நீக்கிய பின்பும் சிறிது நாட்கள் அந்த இடத்தைக் கவனித்து வரவேண்டும். எங்கேனும் மீண்டும் கொம்பு நீக்கம் செய்ய வேண்டும்
  • ஆடுகளில் கொம்பானது மாடுகளை விட விரைவாக வளரும். எனவே ஆட்டுக்குட்டிகளை அடிக்கடி கவனித்து வருதல் வேண்டும்
சூடான இரும்புகொண்டு நீக்குதல்
  • பெரும் பாலும் பின்பற்றப்படும் முறையானது கொம்புக்குருத்தைச் சுற்றிலும் அமிலத்தைத் தடவி சூடான இரும்புக் கம்பிகொண்டு தேய்த்தல் ஆகும்
  • இது ஒரு சில நிமிடங்களே செய்யப்பட்டாலும் அதிகமாக இருக்கும். மேலும் தலையில் அதிகமான சூடு படுவதால் அது குறையும் வரை கால்நடை வலியைத் தாங்க முடியாமல் அவதிப்பட வேண்டும்.
  • காய்ச்சிய இரும்பில் தேய்க்கும்போது மிகவும் அதிகமாக அழுத்துதல் கூடாது. அதுவும் ஆடுகளில் மண்டையானது சிறியதாகவும் ஓடுகள் மெல்லியதாக இருப்பதால் எளிதில் காயம் பட்டுவிட வாய்ப்புண்டு
இரசாயன அமிலங்களைப் பயன்படுத்துதல் கூடாது
  • கடைகளில் பல இரசாயன அமிலங்கள் கொம்பு நீக்கத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றன
  • இவற்றை வாங்கிப் பயன்படுபடுத்தும் போது அவை குருத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை எரித்து நிறைய பண்புகளை ஏற்படுத்துகிறது
  • இதை பயன்படுத்தும்போது பசுவின் மடியிலோ, மற்ற கன்றின் முகத்திலோ பட்டு எரிச்சலை முற்படுத்துகிறது. எனவே இரசாயன அமிலங்களைக் கொம்பு நீக்கத்திற்கும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது
உலோகத் தோண்டி கொண்டு நீக்குதல்
  • உலோகம் மூலம் கொம்புக் குருத்தோடு தோண்டி எடுத்தல் மற்றொரு முறையாகும்
  • கொம்பு நீக்கும் தோண்டியானது இதற்காகவே தனியாகச் செய்யப்பட்ட உலோகம் இது கொம்புடன் அதன் அடிப்பாகத்தையும் சேர்த்துத் தோண்டி விடுகிறது
  • எனவே இந்த முறையில் இரத்தப்போக்கு சேதாரம் மற்றும் வலி அதிகமாக இருக்கும்
தகுந்த முறை
  • அனைத்திலும் சிறந்த முறை ஒரு கால்நடை மருத்துவர் உதவியுடன் மின்சார இயந்திரம் மூலம் நீக்குவதே ஆகும்
  • இம்முறையில் இரத்தக்கசிவு, வலி போன்றவை அதிகம் இருக்கின்றது. கட்டணம் சிறிது அதிகமாணாலும் கால்நடைகளுக்கு எந்த சேதாரமும் இருக்காது
  • இவ்வாறு மருத்துவர் உதவியுடன் அடையாளம் குறியிடுதல் ஆண்குறி நீக்குதல் மற்றும் கொம்பு, அதிக காம்புகளை நீக்கம் செய்வதே சுகாதாரமான முறையாகும்
  • கொம்பு வளர்ந்த பின்பு நீக்குவதை விட வளரும் முன்பு குருத்திலேயே நீக்குவதே சிறந்தது. ஏனெனில் வளர்ந்த கொம்பை நீக்கவதில்தான் வலியும் இரத்தப்போக்கும் அதிகமாவதுடன் கடினமாகவும் இருக்கும்
  • எப்போதும் கொம்பை நீக்கிய பின்பு ஏதேனும் தொற்று நீக்கிகள் தடவவேண்டும். எ.கா: டெட்டால், வேப்பெண்ணெய்
ஆண்மை நீக்கம்
  • பொதுவாக 8-10 வாரங்களான செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை ஆண்மை நீக்கம் செய்தல் வேண்டும். அப்போதுதான் அவற்றைக் கையாள்வது எளிது
  • இதனை ஒரு மருத்துவர் உதவியின்றி நாமாக செய்தல் தவறு
  • செம்மறிக் குட்டிகளை 6 மாத்திற்குள் இறைச்சத்து விற்பதாக இருந்தால் ஆண்மை நீக்கம் அவசியமில்லை. ஆனால் அவற்றை 4 மாதத்திலிருந்து பெண் குட்டிகளுடன் இல்லாமல் தனியே வைத்தல் வேண்டும்
  • ஆண்மை நீக்கம் செய்யும்போது வலி அதிகமாக இருக்கும். செய்யத் தெரிந்தால் மட்டுமே நாமாக செய்தல் வேண்டும்
  • மருத்துவர் உதவியுடன் வலிகுறைப்பான் மயக்க மருந்து கொடுத்த பின்பு செய்தலே சாலச்சிறந்தது. ஆனால் விவசாயிகள் இதை ஒரு சுமையாகக் கருதுகின்றனர்.
  • 6 வாரங்களான செம்மறிக்குட்டி, கன்றுகளுக்கு இதைச் செய்யும்போது அதன் ஆண்குறியில் ஒரு இரப்பரை மாட்டி இரத்தம் வீணாவதைத் தடுக்க வேண்டும்
  • ஒவ்வொரு கன்றிற்கும் செய்யும்போது உபகரணங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்
  • டெட்டானஸ் போன்ற நோய்ப்பரவலைத் தடுக்க தகுந்த தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டிருக்க வேண்டும்.
  • வயதான கால்நடைகளில் ஆண்மை நீக்கம் செய்வது சிரமமான ஒன்றாகும்
குடற்புழு நீக்கம் செய்தல்

கன்றுகளுக்கு மாதம் ஒருமுறை முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளித்தல் வேண்டும். அவ்வப்போது சாணத்தைப் பரிசோதித்து உரிய குடற்புழு நீக்க மருந்து அளிப்பதால் குடற்புழுக்கள் நீக்கப்பட்டு கன்று உட்கொள்ளும் தீவனம் முழுமையாக உட்கிரகிக்கப்பட்டு கன்றின் துரித வளர்ச்சி விரைவில் பருவமடைதல் உடல் எடைபெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
மேலும் அவ்வப்போது உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கத் தகுந்த உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment